தேவையான பொருட்கள் :
இட்லி - 4
பாசுமதி சாதம் - ஒரு ஆழாக்கு
நறுக்கிய வெங்காயம், தக்காளி- 1
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
வனஸ்பதி - 1 டீஸ்பூன்
உப்பு, கொத்தமல்லி - சிறிதளவு
எலுமிச்சம் பழம் - 1
செய்முறை :
இட்லிகளை துண்டுகளாக்கி எண்ணெயில் பொரிக்கவும்.
வாணலியில் வனஸ்பதி உருகியதும் வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்கவும். இத்துடன் கரம் மசாலா மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்த் தூள், 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். மிளகாய்த் தூள் வாசனை போகும் வரை கொதிக்கவிட்டு, பொரித்து வைத்துள்ள இட்லிகளை இதில் போடவும் இத்துடன் வெந்த சாதத்தை மிக்ஸ் செய்து எலுமிச்சை சாறு பிழிந்தால் வித்தியாசமான இட்லி கைமா பிரியாணி ரெடி.