கறி முந்தரி வறுவல்

தேவையான பொருட்கள்
மட்டன் கொத்தியது-1/2 கிலோ, முந்தரிப் பருப்பு-50 கிராம், பொட்டுக்கடலை-2 ஸ்பூன், எள்ளு (வெள்ளை)-2 ஸ்பூன், தேங்காய்-2 ஸ்பூன், வெள்ளை மிளகு-3 அங்குலம், எண்ணெய்-4 ஸ்பூன், நெய்-2 ஸ்பூன், கொத்தமல்லி-1/2 கட்டு, எலும்பிச்சை சாறு-1 ஸ்பூன், உப்பு தேவையான அளவு.
சிறிது நெய்யில் வெள்ளை எள்ளையும் முந்தரியையும் தனித் தனியாக வறுக்கவும்.
இதையும் பொட்டு கடலையும் தனித்தனியாகப் பொடித்து (கரகரப்பாக) அரைக்கவும்.
கறியைக் கழுவி நீர் வடியவிடவும். இதனோடு சிறிது மஞ்சள் பொடி தட்டிய இஞ்சி, பூண் சேர்த்துக் கிளறி 10 நிமிடம் ஊறவி்டவும். பிரிஞ்சி இலை சேர்க்கவும்.
தேங்காய் வெள்ளை மிளகு நீர்விட்டு மைய அரைக்கவும்.
எண்ணெய் காயவிட்டு-கறியையும் தேங்காய் மிளகு கலவையையும் போட்டு உப்பு சேர்த்து வதக்கவும்.
சிறிது தண்ணீர் வி்டவும். நன்றாக வதக்கி வெந்து வரும்போது எலுமிச்சை சாறு கலக்கவும்.
கடைசியாக பொடி செய்யப்பட்ட முந்தரிப்பருப்பு, வெள்ளை எள்ளு, பொட்டுக்கடலை பொடியும் ஆய்ந்த கொத்தமல்லியும் சேர்த்து வதக்கவும். நெய்விட்டுக் கிளறவும். ஒரளவுக்கு நீர் வற்றியது இறக்கவும்.
ரைஸ், சப்பாத்தி, பரோட்டா, நான், நூடுல்ஸ், ஆப்பம், இடியாப்பம், இட்லி, தோசையோடு பரிமாறலாம்.