
செய்முறை : உருளைக்கிழங்கை குக்கரில் வேக வைத்து, தோல் உரித்து நன்றாக மசித்துக் கொள்ளவும் இதனுடன் அரிசி மாவு, மிளகாய்த்தூள், கரம் மசாலத்தூள், எள், உப்பு சேர்த்துக் கெட்டியாகக் கலந்து கொள்ளவும். இந்த மாவை உருட்டி விரல் நீள துண்டுகளாக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும், இந்த துண்டுகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.