அரிசி மாவு சுண்டல்

தேவையானவை : அரிசி மாவு - ஒரு கப், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், தேங்காய்ப் பால் - அரை கப், எண்ணெய் -  2 டீஸ்பூன், கறிபவேப்பிலை - சிறிதளவு, உப்பு தேவையான அளவு.
செய்முறை : அரிசி மாவில் உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கலந்துக் கொள்ளவும். தேங்காய்ப் பாலில் கால் கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, மாவை சிறிய சிறிதாகப் போட்டுக் கிளறவும். மாவு வெந்து கெட்டியானதும் இறக்கவும்.
வெந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேக வைத்து எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து அதில் உருண்டைகளைப் போட்டு கிளறி இறக்கவும்.